சனி, 21 மே, 2016

திமுக இந்த தேர்தலில் பின்தங்க முக்கிய காரணங்கள்

# ஊழலின், அராஜகத்தின் பிரதான அடையாளமாகக் கருதப்படும் தயாநிதி, கருணாநிதியின் ்பரப்புரையின்பொது உடன் சென்று எல்லாவற்றையும் நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
# தேர்தல் நேரத்திலும் அழகிரியை கட்சியை விட்டு ஒட்டுமொத்தமாக தள்ளிவைத்தது.
# பிரதான பேச்சாளரான கருணாநிதிக்கு மாற்றாக அதே அளவுக்கு ஈடுகொடுக்கும் சிறந்த பேச்சாளரை கண்டுபிடிக்காதது.
# ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மக்களை ஈர்க்கும்விதமாக இல்லாதது. அவருடைய காஸ்ட்யூம் ஈர்த்த ஆளவு அவருடைய பேச்சு ஈர்க்கவில்லை.
# இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பே்ச்சாளர்களிலும் குறிப்பிடத்தக்க பேச்சாளர்கள் இல்லாதது.
# பரப்புரையில் கடந்த ஆட்சியில் திமுக செய்த நல்ல செயல் திட்டங்களை ஆரம்பத்திலேயே மக்களிடம் கொண்டு சேர்க்காதது.
# மிக முக்கியமான காரணம், ’தூக்கி வளர்க்கும் துயர’மாக காங்கிரஸை மடியில் கட்டி அலைந்தது
# அதிருப்தி வேட்பாளர்களுக்காக களத்தில் உத்வேகத்துடன் தொண்டர்கள் வேலை செய்யாதது.
# சில இடங்களில் ’இந்த தொகுதியில் நாம் ஜெயிக்கமாட்டோம்’ என்று தொண்டர்களும் கட்சி பிரமுகர்களும் பணத்தை அப்படியே வைத்துக்கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக