சனி, 21 மே, 2016

இவர்களெல்லாம் வரிசையில் நிற்கக் கூடாதா?

’’ஸ்டாலின் குடும்பத்துடன் வரிசையில் நின்றார். அஜித் குடும்பத்துடன் வரிசையில் நின்றார்’’. -செய்தி
அய்யா இதை எழுதுற படம்பிடிக்கிற நீங்களும் வரிசையில் நின்றுதானே ஓட்டுப்போடுறீங்க? அரசியலில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதாலோ, அஜீத் சினிமா நடிகர் என்பதாலோ அவர்களுக்கு ஸ்பெஷல் ஓட்டு ்ி இல்லையே. 

ஸ்டாலின் வரிசையில் நின்று ஓட்டுப் போடுவது ஒரு தலைவராக மக்களுக்கு அவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான் என்று சொன்னால் கூட பரவாயில்லை. ஏதோ அவர் தேவ தூதர் போலவும் அவர் வரிசையில் நின்றதே அதிசயம் போலவும் எத்ற்கு சொல்லிக்கொண்டே அலைய வேண்டும்?
உலகநாடுகளில் ஜனநாயகக் கடமையை செய்ய வரும் அனைவரும் வரிசையில் நின்றுதான் ஓட்டுப் போடுகிறார்கள். அதில் ஒபாமா, கிளின்டன் என யாரும் விதிவிலக்கல்ல. அங்கு அது பெரும் செய்தியாவது இல்லை...இங்குபோல. நம்மின் இந்த வழிபாட்டு மனோபாவம் ஒழிகின்ற அன்றுதான் இம்மாதிரியான செய்திகள் ஒழியும்.
ஆனால் மாறாக இந்த வழிபாட்டு மனோபாவத்தை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்கின்றன அரசியல்வாதிகளும் அவர் சார்ந்த கட்சிகளும். 

செலிபிரட்டிகளும் நம்மை போன்ற மனிதர்கள்தாம் என்று உணர்ந்தால்தான் இந்த வழிபாட்டு மனோபாவத்தை கொஞ்சமாவது அழிக்க முடியும். அவர்களை அரசியல்வாதிகளாகவும் செலிபிரட்டிகளாகவும் ஆக்கியதே நாம்-மக்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்

1 கருத்து: